தடுப்பூசி தேசம்
உலகிலேயே அதிகளவு தடுப்பூசிகள் போடப்பட்ட குழந்தைகள் அமெரிக்கக் குழந்தைகளே. 50 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஏறக்குறைய எல்லாக் குழந்தைகளுக்கும் தட்டம்மை வந்துள்ளது. இயற்கையான உடல் ஆற்றல், நோய் எதிர்ப்பு ஆற்றல், காரணமாக தட்டம்மை குணமாகி பின் வாழ்நாள் முழுதும் நோய் எதிர்ப்பு தன்மை நீடிக்கும் நிலை இருந்தது. தடுப்பூசிகள் விரிவாக நடைமுறைக்கு வந்தன. தடுப்பூசி மருந்துகள் தற்காலிகமான பாதுகாப்பை மட்டுமே தருகின்றன. இந்தத் தற்காலிக பாதுகாப்பு மறைந்த பின் வருடங்கள் செல்லச்செல்ல (ஆண்), பீஜங்கள் (பெண்) சினைப்பை, மற்றும் நரம்புமண்டலச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
உயிருள்ள தட்டம்மை வைரஸ்கள் மூளை/முள்ளத்தண்டு திரவத்தில் கலந்து... குழந்தைகளிடம் ‘AUSTISM’ நோய்த் தன்மைகளை ஏற்படுத்துகின்றன.
20ஆம் நூற்றாண்டின் முதல் 60 ஆண்டு களுக்குள் தட்டம்மை சாவுகள் 97.7% குறைந்து விட்டன. அமெரிக்காவில் 1900ல் 1 மில்லியனில் 133 பேர் என்பது குழந்தை பொது மரணவிகிதம். இவர்களில் 100 பேர் தட்டம்மையால் மரணமடைந்தனர். 1960ல் மரணவிகிதம் 0.3 ஆக குறைந்துவிட்டது. ஆனால் 1963ல் தான் தடுப்பூசி அறிமுகம் செய்யப் பட்டது. (தடுப்பூசியால் மரண விகிதம் குறைந்ததாகக் கூறுவது கட்டுக்கதை)
இதேபோல 20ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்திலேயே டிப்தீரியா, பெர்டுசிஸ், (கக்கு வான் இருமல்) மரணங்களும் 90 சதம் குறைந்துவிட்டன.
தடுப்பூசிகள் அமுலுக்கு வரும் முன்பே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் குழந்தைகள்மரணவிகிதம் குறைந்து விட்டது. சுகாதார வளர்ச்சி, சத்துணவு, புத்தம் புதிய, காய்கறிகள்,பழங்கள், வினியோகம் மற்றும் பாதுகாப்பு, கழிவுநீர் முறையாக அகற்றுதல் போன்ற வையே மரணவிகிதம் சரிந்ததற்கான காரணங்கள்.
இன்று அமெரிக்காவில் 68 குடும்பங்களில் 1 குடும்பத்தில் ஒரு AUSTISM பாதித்த குழந்தை தோன்றுகிறது. 4 மில்லியன் அமெரிக்க குழந்தைகள் ATTENTION DEFICIT AND HYPERACTIVE DISORDER (ADHD) எனப்படும் கவனக்குறைவு மற்றும் மிகை இயக்க கோளாறு நோய்க்கு ஆளாகியுள்ளனர். ஆறில் ஒரு குழந்தைக்கு DYSLEXIA எனும் கற்றல் குறைபாடு நோய் ஏற்பட்டுள்ளது. நோய் எதிர்ப்புத்திறன் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் பெருவாரியாகக் குழந்தைகளிடம் காணப்படுகின்றன.
முதல் வகை நீரிழிவு (Type I - Diabetes) 17 மடங்கு அதிகரித்துள்ளது. 1950ல் 7100 குழந்தைகளில் 1 குழந்தைக்கு Type I - Diabetes நோய் ஏற்பட்டது. இன்று 1400 குழந்தைகளில் 1 குழந்தைக்கு இந்நோய் ஏற்படுகிறது. JUVENILE ARTHRITIS எனப்படும் குழந்தை மூட்டுவலிநோய் 25 ஆண்டுகளுக்கு முன் பார்ப்பது அரிது. இன்று 3 இலட்சம் அமெரிக்க குழந்தைகள் இந்நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளிடம் தோன்றும் ஆஸ்துமா 4 மடங்கு அதிகரித்து விட்டது. 50 ஆண்டு களுக்கு முன் இல்லாத பல்வேறு வயிற்றுக் கோளாறுகள் இன்று குழந்தைகளிடம் பெருமளவு காணப்படுகின்றன. தனிநபர் வருமானம், தனிநபர், சுகாதாரம், பொது ஆரோக்கியம், சத்தான உணவுகள், வாழ்க்கை வசதிகள் எல்லாம் மேம்பட்ட குபேரபுரி என்று பெருமையாகப் பேசப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில்... நோய் எதிர்ப்பாற்றல் கோளாறுகளும் நரம்பியல் நோய்களும் பெருகும் விபரீதத்திற்கு தடுப்பூசிகள் தவிர வேறு எந்தக் காரணங்களையும் இதுவரை மருத்துவ அறிஞர்கள் சுட்டிக்காட்டவில்லை.
தடுப்பூசிகள் - உயிராற்றல் மீதான தாக்குதல்
ஹோமியோபதி மருத்துவக் கருத்துப்படி தடுப்பூசி என்பது நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமை பெற்றிராத குழந்தைகளின் உயிராற்றல் மீது நடத்தப்படும் தாக்குதலே. ஹோமி யோபதியின் பார்வையில் VACCINATIONS என்பவை உறைந்த நோய்களே (Frozen diseases) தடுப்பு மருந்துகளின் நச்சுத்தன்மைகளால் உயிராற்றலில் சீர்குலைவு ஏற்படுகிறது. மனித உடலுறுப்பு மண்டலங்கள் சுயமாகவே இயங்கி நோய்க்குறிகள் தோன்றும் போது அவற்றை குணப்படுத்துகின்றன. இத்தகைய குணப்படுத்தும் இயல்பை, குணப்படுத்தும் பயிற்சியை தடுப்பூசிகள் பாதிக்கின்றது; தடுக்கிறது.
100 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளின் மரணங்களுக்கு டிப்தீரியா, தட்டம்மை, ஸ்கார்லட் சுரம், கக்குவான் இருமல் போன்ற தொற்று நோய்களே பிரதான காரணிகளாக இருந்தன. ஆனால் இன்றோ, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் ஏற்படும் மரணங்களுக்கு விபத் துக்களும், மரபணு பரம்பரைக் காரணங்களும், வளர்ச்சிக் குறைபாடுகளும், திடீர் மரண நோயும் புற்று நோயும் முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்நோய்களில் பலவற்றுக்கு அடிப்படைக் காரணம் தடுப்பூசிகளே. இன்றைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டல சீர்கேடுகளுக்கும் (Immune system disorders) மோசமான நரம்பியல் பாதிப்புகளுக்கும் தடுப்பூசிகள் அடிப்படையான பிரதானக் காரணங்களாக அமைகின்றன.
டென்மார்க் நாட்டில் தடுப்பூசிகள் போட்டவர்களில் AUSTISM உள்ளவர்கள் 4,40,000 தடுப்பூசி போடாத குழந்தைகளில் AUSTISM உள்ளவர்கள் 97,000. (Journal of American Physicians and Surgens 2004’ நூலில் Dr.Canol Stott எழுதிய MMR and AUSTISM in Perspective: The Denmark Story என்ற கட்டுரையிலிருந்து.)
போலியோ பாதிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை புள்ளி விவரம்
போலியோவை தடுக்க நாடு முழு வதும் தீவிர பிரச்சாரம் நடைபெற்ற போதும் பீகாரில் இந்த ஆண்டு போலியோ எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் ஒவ்வொரு வாரமும் 9 குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. போலியோ பாதிப்பு உள்ள மாநிலங்களில் முதலிடத்தை பீகார் பெற்றுள்ளது.
பீகாரில், போலியோ மிகவும் பாதித்த மாவட்டங்களாக சமஸ்திபூர், தர்பங்கா, முசாபர்பூர் ககாரியா ஆகியவை உள்ளன. மொத்த மாநில போலியோ பாதிப்பில் 42 சதவீதம் இம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளன. போலியோ பாதிப்பில் ஒரு மாத குழந்தையும் இடம் பெற்றுள்ளது. மிக இளவயது பாதிப்பு குழந்தையாக இது உள்ளது. அதிக வயது பாதிப்பு குழந்தையாக 5வயது பாதிப்பு குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் கடந்த 5 மாதங்களில் 5 சுற்று போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து திட்டத்திற்காக ரூ. 30 கோடி செலவிடப்பட்டுள்ளது. போலியோ பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 7 சுற்று போலியோ தடுப்பு மருந்து தரப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலையளிப்பதாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறினர். கடந்த 5 மாதங்களில் 181 குழந்தைகள் போலியோவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|